Monday 20 November 2017

நரம்புகள் சுவைமிக்க நாவுகள் 
----------------------------------------------
ஆம் 
இங்கு எதுவும் இல்லை 
இல்லை இங்கு யாம் செய்த தவம் 
தவம் எனில் இதற்கு 
இதற்காகவா... என்பதே மிஞ்சும் 
மிஞ்சும் எதற்கும் பூநிழல் 
பூநிழல் பிரகாசம் எனில் நிழல் இரவின் கசம் 
கசம் பிரகாசத்தில் கரைக்கயியலா உண்மை 
உண்மை காய்க்கும் மரம் 
காய்ப்பவை எல்லாம் நினைவுகள்
நினைவுகள் காதுகளுடன் நடப்பவை 
நடப்பவை எல்லாம் ஒருவகையில் அதிர்ச்சி 
அதிர்வு இசை தன்மை கொண்ட நரம்புகள்
நரம்புகள் சுவைமிக்க நாவுகள் 
நாவுகள் ஐந்து உடலில் 
உடலில் பைத்திய சுவை கசப்பு 
கசப்பை தெளிக்கும் காலம் கால்கடுக்க
கால்கடுக்க காலம் இருக்கும் 
இருக்கும் யாவும் இங்கு
ஆம்
Irreversible
--------------
ஆம்
இங்கு யாவும் இருக்கும்
இருக்கும் காலம் கால்கடுக்க
கால்கடுக்க காலம் தெளிக்கும் கசப்பை
கசப்பு சுவை பைத்திய உடலில்
உடலில் ஐந்து நாவுகள்
நாவுகள் சுவைமிக்க நரம்புகள்
நரம்புகள் கொண்ட தன்மை இசை அதிர்வு
அதிர்ச்சி ஒருவகையில் எல்லாம் நடப்பவை
நடப்பவை காதுகளுடன் நினைவுகள்
நினைவுகள் எல்லாம் காய்ப்பவை
மரம் காய்க்கும் உண்மை
உண்மை கரைக்கயியலா பிரகாசத்தில் கசம்
கசம் இரவின் நிழல் எனில் பிரகாசம் பூநிழல்
பூநிழல் எதற்கும் மிஞ்சும்
மிஞ்சும் என்பதே ... இதற்காகவா
இதற்கு எனில் தவம்
தவம் செய்த யாம் இங்கு இல்லை
இல்லை எதுவும் இங்கு
ஆம்
- தேன்மொழி தாஸ்
5.4.2017
1.30 am

Kaaya
Mega publications 2017

Friday 27 October 2017

ஜாதிக்காய் பிஞ்செனக் காமம்
.............................................................
மயிலின் முன்கழுத்தென நீலமேறி 
வளைந்து ஓடும் ஓடையென வெட்கம் 
முத்தம் விலக்க மறுகுகிறது

நீரின் நிழல் அருந்தும்

தவளைக்குஞ்சின்
வயிற்றில் கண்ணாடி வளையல்
சுழல்வதென உடலுக்குள் ஆசை
சூல் கொள்கிறது

காட்டுப்புறாவின் மேனியில் 

விளையும் 
கந்தகப் பொன்பச்சை நிறத்தை
உருகுமென் கண்கள் அணிகின்றன

காலின் பெருவிரல் 

அருகில் இருக்கும் சிறுவிரலை 
உரசிக் கொளுத்தும் தீ
மூளையில் மேகமென விரைகிறது

நீ அருகில் வருகையில்

காந்த மலையின்
சுனையின் சுற்றுச் சூழலில்
காற்றின் கலவரம் 
என்னைத் தொலைக்கிறது

ஜாதிக்காய் பிஞ்சென காமம் காய்க்கையில்

நாற்பது விரல்களில் 
நாயனச் சூத்திரமும்
காந்தள் இதழ் சுவைக்க
கசியும் நன்னீர் ஊற்றும் நம்மை
கற்பகக் காடாய்ப் படைக்கிறது

உனது

கற்கடகக் கைகளில் 
வெளிமானெனத் துள்ளும் 
உடலுக்குள் உருகும் மனதில்
முத்த நரம்புகள் பூக்கத் துவங்குவதை ரசிக்கிறாய்

ஊறும் உன் அணுக்கள்

நெத்திலிகளாய் நீச்சலடிப்பதையும் 
உனது உதடுகள் பறக்கும் அணிலென
எனது ஸ்தனங்களில் இடறத் துடிப்பதையும் 
பொன்துகள்களாய் செவிப்பறையில் பூசுகிறாய்

புருவ மத்தியில் இழந்த

புத்தியின் கொடியில் 
பூனைக்காலிப் பூக்கள்
பூத்துக் கறுக்கத் துவங்கிவிட்டன
கால்கள் சர்ப்பங்களாகையில்
காமம் களவென விளைந்த கனவுகளை வெல்கின்றன

வெள்ளி நிலவின் உட்கருவில்

பனி ஊறுகையில்
தாகத்தின் நிறம் வெள்ளை எனவும்
தாமரையில் சுடரும் ஒளி 
உயிரின் தண்டில் ஊடுருவுவதையும்
உன்னிடம் எப்படிச் சொல்வேன்

- Thenmozhi Das
10.5.2016


Wednesday 16 August 2017


  (கா) ( டு ) வுள்

சிந்தனைகள் தாபரங்களில் தூங்க மறுத்து
மூளையின் இயக்கப்புறணியை புரட்டுகின்றன
முன் எப்போதோ கனவில் கண்டது
பின் எப்போதோ பகலில் காணக்கிடைக்கும்   
வானம் என்றேனும் வடிவம் வேண்டி அலறும்
பூமி அந்நாளில் புலம்பும்
அதுவரை
நீரின் தாயை நித்திரையடையாமல்
இருக்கும்படி சொல்கிறேன்
மனிதனின் திருவெலும்பு 
திடங்கொண்டு இருக்கையில்
தாற்றுக்கோலை தேடுமோ
தேடினால் புரியும்
ஆழத்தின் முகம் பனிக்கல்
காதலின் முகம் மாயக்கல்
பிடரி மடலில் அது மறைந்தே இருக்கட்டும்
நம்பிக்கைகளை மூடன்
கருமைமிக்க காந்தமாக்குகிறான்
ஞானியின் இதயம் இதனருகே
புன்னகையுடன் விலகும்
ஞானிக்கு அறிவின் உணவு
சிங்கத்தின் நகத்திலும் கிடைக்கும்
ஆனால் ஒருபோதும்
காட்டிற்கான உணவை கடலால் தர இயலாது
காடு சுயம்பு
நீரினை படைத்துக் கொண்டே இருக்கும் கடவுள்


- தேன்மொழி தாஸ்  

25.2.2016
1.14 am

                  




மரத்தின் நெஞ்சு
•••••••••••••••••••••••
ஒரு வெட்டுக்கிளியை
என்னால் மிரட்டமுடியாது விரட்டவும்
இலைநரம்புகளில் இயலாமை துடிக்கிறது
காட்டுக்குருவிகளின் கடினமனம் அதன் கருவறையடியில் இருப்பதை
குஞ்சுகள் பாடுகின்றன
அவை மீண்டும் இசைக்கின்றன புதிய முட்டைகள்நெய்க்காளான் புற்று
நெய்க்காளான் புற்றுராஜாளியின் கற்பனை
காட்டின் உச்சியில்
இறைச்சிகளை இழுத்து வருகிறது
அதன் மோப்ப சக்தியை
கண்களுக்குள் கடத்தும் ஆரவாரத்தில் தான்
மலைகளை அளக்கிறது 
ரத்தத்தின் சத்தம் சருகுகளுக்கு அடியில் இருப்பதை
சர்வ சுதந்திரம் இருளின் இடையே கடப்பதைநானும் அறிவேன்
நான் தேவதை அல்ல
எனது பாதங்கள் பள்ளத்தாக்கினடியிலும்
மனம் நிகர் அற்ற வெளியாகவும் இருக்கையில்
நிகீயெனக் கனைக்கவும் நதியெனப் பாயவும் முடியுமா 
மலைகளின் ஊடாக மேய்ச்சலுக்குச்செல்லும் கேளையாடுகளின்
கவலைகளை
இச்சலப்பூக்கள் அறியும்
இடையன் அறியான்நான் துயரடைகிறேன்எனது முகத்தின் கதவு
கூரிய விழிகளுக்குப் பின்னிருக்கும்
குளிர் காலமேமொட்டு தும்மும் போது
பிறக்கும் ஒளி தான்
மலர்தல்கல்த்திரி மரத்தின் நெஞ்சு
கணீர் கணீரென கதறும் போது
கோடாலியின் ஊடே கடந்து மலைகளை அறைவது
காலங்களின் அடித்தொண்டை தான்
-தேன்மொழி தாஸ்
          19.12.2016 


            02.14am




           

மூடுபனியின் நீர்ச்சால்கள்

காற்றின் வரையறைகளை கண்டுணரும் மலைவாசிக்கு யானைகளின் லத்திகள் காட்டு வழிகளின் இரகசியங்கள் யாருமற்ற போது அடி வயிற்றிலிருந்து எ...