Monday, 5 February 2018

உன் காதலியின் உதடுகளில் என்னைப் புதைத்து
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குளிர் காமத்தை அடைகாப்பதை உணர்ந்த போது
குருவியென உன் வீட்டுத் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தேன்
உன் காதலியின் உதடுகளில் என்னைப் புதைத்து
மீண்டு வர இயலாது தவித்தாய்
எனது கல்லீரலை அவளின் இடதுகரம் பிடித்திருந்தது
கற்பனைகளால் அலங்கரிக்கப்பட்ட அவள்
என்னை எதிர்கொண்ட போது
அதனை கற்களாகவே அள்ளினேன்
அவளின் இதயம் பூமியில் விளைந்து சிதறித் தொலையும்
எள்ளின் விதையென மாறிப்போகும்
அந்நாளை நான் கண்டும் கடந்தேன்
பைத்தியத்தின் மொழி சிறு புன்னகையில் துவங்குகிறது
கூட்டம் கூட்டமாய் வெட்டுக்கிளிகள் புறப்படுகின்றன
இனிய பொய்களோடு குழி முயல்களும்
அவள் நரம்பில் உன் கண்கள் கிடப்பது
எனக்குள் பித்த ஊற்றாகிறது

Composed by - Thenmozi das
14.11.2011
3.23 am


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

மூடுபனியின் நீர்ச்சால்கள்

காற்றின் வரையறைகளை கண்டுணரும் மலைவாசிக்கு யானைகளின் லத்திகள் காட்டு வழிகளின் இரகசியங்கள் யாருமற்ற போது அடி வயிற்றிலிருந்து எ...